மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

ரிசர்வ் வங்கியின் அயோக்கியத்தனம்

பாரதிய (ஜனதா  கட்சி) வங்கி?


காவிகளின் ஆதிக்கத்தில் ஜனநாயக அடிப்படை மாண்பு வன்புணர்ச்சிக்குள்ளாக்கப் பட்டிருப்பதும், விலைக்கு வாங்கப்பட்ட ஊடகங்களின் கவர்ச்சிக் குத்தாட்டங்களும் மிக ஆபத்தான சூழ்நிலையில் இந்தியா தள்ளப்பட்டிருக்கிறது என்றே அனுதினமும் தெரிவிக்கின்றன.

அதிலும், தன்னாட்சி அமைப்புகளான தேர்தல் ஆணையம், தணிக்கை, நீதிமன்றங்கள் மட்டுமல்லாது ரிசர்வ் வங்கியின் கள்ளக்  கூட்டணி  என்பது ஒட்டுமொத்த எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கும் என்பது உண்மை.

சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்ற பணம், கரூர் அன்புநாதன் கண்டைனர் போன்ற காமெடிகளை மக்கள் மத்தியில் தங்களை தோலுரித்துக் காட்டியிருந்தாலும் செல்லாத நோட்டு விஷயத்தில்  இன்னமும் தெள்ளத்தெளிவாக துணிச்சலாக மத்திய பாஜக அரசாங்கத்திற்கு ஊதுகுழலாய்  வாசித்துக்கொண்டிருப்பது மிக வெட்கக்கேடானது. அருவருக்கத்தக்க எதேச்சதிகாரம்.

கறுப்பு பண ஒழிப்பு என்ற மோசடியான திட்டம் இன்னமும் வெளியே சரியாக அம்பலப்படாமல் இருக்க முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிற, மோடியின் மாநிலமான குஜராத்தை சேர்ந்த ஊர்ஜித்  பட்டேலை கவர்னராகக் கொண்ட ரிசர்வ் வங்கி இனி என்னவெல்லாம் செய்திருக்கிறதோ ?



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...