மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

தினமலர் சிற (ரி )ப்பு நிருபர்?

மாற்றம் வேண்டும் என்று பசப்பும் கபடதாரிகள் எல்லாம் "திமுகவிற்கு மாற்று" என்ற ஒற்றைப் புள்ளியில் தான் வெவ்வேறு வகையான குரல்களில் கூவிக்  கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர்கள் விவாதங்கள் மற்றும் ஆராய்ச்சி (?!)களிலிருந்தே  எத்தனை முறை தோலுரித்தாலும் வலிக்காதது மாதிரியே நடிப்பதில் காவிகள் கில்லாடிகள்.

அதிலும் தினமலர் போன்ற அவாளின் பத்திரிகை அவ்வப்போது தன்  மனதின் ஊறலை சிறப்பு நிருபர் என்ற பெயரிலும் அதன் தொடர்ச்சியாக  வாசகர் கருத்து என்ற பெயரிலும் தனக்குத்தானே சொறிந்து கொண்டு புளகாங்கிதம் அடைவது வழக்கம். 


இன்றைய ஆன்லைன் பதிப்பில் கமல், ரஜினியின் வருகை ஆயிரங்காலத்து பயிர்களுக்கு ஆபத்து?  (இணைப்பு  என்ற தலைப்பில் "அப்துல் கலாம் வீட்டில் அரசியல் பயணம் துவங்கியதால் சிறுபான்மையினர் ஆதரவும்,  நல்லக்கண்ணை சந்தித்ததால் இடதுசாரிகள் ஆதரவும்,  கெஜ்ரிவாலை அழைத்ததால் நேர்மையை விரும்பும் உயர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் ஆதரவும் கிடைக்கும்" என்று ஆராய்ச்சிக் கட்டுரை வெளியிட்டுள்ளது. 

இஸ்லாமிய பெயரை வைத்திருந்தாலும் அக்ரஹாரத்து அடிமையாகவே வாழ்ந்து மறைந்த அப்துல் கலாமே சிறுபான்மையினர் ஆதரவை பெற்றவர் இல்லை என்பதோடு அவர் குஜராத்தில் சிறுபான்மையினருக்கு நேர்ந்த கொடுமையின் போது வாயைத் திறக்காமல் கனவு காண சென்றது தினமலருக்கு மறந்திருக்கலாம். சிறுபான்மையினர் மறக்க மாட்டார்களே அம்பி?

கெஜ்ரிவாலை தினந்தோறும் தூற்றிக்கொண்டிருந்த ஒரே தமிழ்  பத்திரிக்கையான தினமலருக்கு இன்று நேர்மையை விரும்பும் உயர், மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் அடையாளமாகத் திடீரென்று அவர் காட்சியளிப்பதின் காரணம்  இவர்கள்  எல்லாம் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதால் தானே? இருக்கலாம்..அவர் சமோசாவுக்கே கோடிக்கணக்கில் செலவழிப்பவரல்லவா..?

அது சரி, போகிற போக்கில் நேர்மையை விரும்பும் உயர் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் - அப்படின்னா  யாரு? நீரவ் மோடி, லலித் மோடி, அம்பானி மற்றும் அதானி போன்றோரா?

அம்பி..போயி  ஆத்துல   யாராவது பெரியவா   இருந்தா வரச்  சொல்லுடா ..நேக்கு விவரம் பத்தாதுடா ..



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...