மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

வங்கி அதிகாரிகள் வாயைத் திறக்க வேண்டும் - ஜெட்லீ

பத்து நாள் கழித்து வாயைத்திறந்த  பின் வேண்டுகோள்..

விலைவாசி ஏற்றம்,  வேலையின்மை,  தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றாமை, மாட்டிறைச்சி விவகாரம், கச்சா எண்ணெய் குறைந்த விலையில் கிடைத்தாலும் பெட்ரோல்  தாறுமாறான விலையேற்றம், பணமதிப்பிழப்பு முடிவு தோல்வி, ஜிஎஸ்டி, காவிகளின் அட்ராசிட்டி  மற்றும் இவையெல்லாவற்றிற்கும் பிரதமரின் கள்ள மவுனம்  என்று ஒவ்வொரு முறையும் மத்திய பாஜக அரசுக்கெதிராக   விமரிசனங்கள் எழும்பும் பொழுதெல்லாம்   காவிகள் ஒற்றை வாக்கியத்தைத் தான் வேலைக்கு அமர்த்தப்பட்ட ஆன்லைன் அடிமைகள் மூலம் முட்டுக்கொடுத்தார்கள்.

அது.."போன காங்கிரஸ்  அரசைப்  போல இந்த அரசில் ஏதும் ஊழல் குற்றச்சாட்டு வரவில்லையே.."

இப்பொழுது பல்லாயிரக்கணக்கான கோடி  கொள்ளைகள் வெளியே  வரத்தொடங்கியதும் பாஜகவின் ஜெட்லீ பத்து நாள் கள்ள மவுனத்திற்குப் பின்  அது காங்கிரஸ் அரசிலேயே ஆரம்பித்து விட்டதென்றும் அது அதிகாரிகள் சம்பந்தப்பட்டது என்றும் நழுவுகிறார். அதிலும் ஆன்லைன் அடிமைகள் ஒருபடி மேலே போய் "ஊழல் வெளியே தெரிய வைத்தது பாஜகவின் சாதனை" என்று கூசாமல் சாணி எறிதலுக்கு முகம் கொடுக்கிறார்கள். உண்மையில் நீரவ் மோடியை பணத்தோடு  வெளியே தப்பி ஓட வைத்தது பாஜக என்பது வேறு விஷயம்.

ஏம்பா அப்ரசண்டிகளா..2ஜியும் அப்படித்தானே காங்கிரஸ் ஆட்சியில் வெளியே வந்தது? 

உங்கள் கூற்றுப்படியே பார்த்தோமானால், அதாவது நீரவ் மோடி யின் 11000 கோடி ஏப்பத்திற்கு பாஜக காரணமில்லையென்றால்..

1. அதற்கு முன் 2ஜியின் "முதலில் வருபவருக்கு முன்னுரிமை" என்ற கொள்கைகளை வகுத்ததுமல்லாமல் இழப்பை ஏற்படுத்திய  பாஜக தான் முதல் குற்றவாளி என்று ஒத்துக்கொள்.

2. பாஜக குற்றவாளி இல்லையென்றால் நீதிபதி ஷைனியின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு  திமுகவிடம் மன்னிப்பு கேள்.

சொரணை என்ற ஒன்று இருந்தால்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...