என் பொய்களுக்கு என்ன பதில்?
வைரமுத்துவின் ஆண்டாள் குறித்த கருத்தை சர்ச்சையாக்கி, திரும்பத் திரும்ப அது குறித்த செய்திகளையும் விவாதங்களையும் நடத்தி தமிழகத்தில் எப்படியாயினும் இந்துக்களாய் ஒன்று சேர்த்து விடலாம், அவர்கள் முதுகில் சவாரி செய்யலாம் என்று விடா முயற்சி செய்து ஓரளவுக்கேனும் ஒரு தளத்தை உருவாக்கி வைத்திருந்ததை புன்முறுவலோடு கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் பார்த்து விஜயேந்திரன் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்ததினால் தமிழர்களாய் ஒன்று சேர்ந்து கும்மியடித்து விட்டதில் கலங்கியிருந்த காவிகள் தரப்புக்கு இப்போ இன்னொரு பிரச்சினை.
அது தான் நீட் தேர்வு வர இருக்கிறது.
கடந்த வருடமே பாஜகவுக்கு எதிராக ஆப்புகள் கூர்சீவப்பட்டிருந்ததை அறியாதவரல்ல பாண்டே . கேள்விக்கு என்ன பதில் நிகழ்ச்சி மூலமாக எத்தனை முறை அசிங்கப்பட்டிருந்தாலும் துடைத்துக் கொண்டு களமிறங்கிருக்கிறது அடுத்த முயற்சியில்.
நேற்று திமுகவின் நேரு பேசியதை அப்படியே திரித்து, தந்தி டிவியினுடைய ட்விட்டர் பக்கத்தில் முட்டு சந்தில் சிக்கியவராய் வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் இந்த அதி தீவிர யோக்கியர்.
நேரு பேசிய வீடியோவையும் கீழே இணைத்துள்ளோம்..நீங்களும் உங்கள் பங்குக்கு....எவ்வ்வ்வளவு முடியுமோ...அவ்வளவு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக