யாரார்க்கு என்ன வேஷமோ... |
தமிழக அரசியலில் ஒரு வெற்றிடம் இருப்பதாக நம்பும் அம்பிகளில் இவரும் ஒருத்தர்.
அரசியல் பேசக்கூடாதுன்னு தான் வந்தேன் ..ஆனா அரசியல் பேச வச்சிட்டாங்கன்னு, வீட்ல ஏற்கனவே கண்ணாடி முன்ன நின்னு பல தடவ பேசிப் பார்த்த டயலாக்கை சும்மா அவுத்து விட்டுப்புட்டாரு நம்ம தலைவரு.
சரி, அப்படியே அந்த மேடையில இவருக்கு முன்னாடி பேசுனவங்க கடைசி நேரத்துல, நான் உள்பட யாருமே அரசியலே பேசக்கூடாதுங்கிற இவரு விரதத்தை கலைக்க முடியும்னா ..
அரசியலுக்கு வந்த பின் எத்தனையோ பிரச்சினைகளை தமிழகம் சந்தித்தபோது, உங்கள் கருத்து என்ன என்று பல மீடியாக்கள் மூலமா வலியுறுத்திக் கேட்டும் வாயத்தொறக்கலன்னா அது கள்ள மௌனம் தானே?
சரி அது கூட இருக்கட்டும். இப்ப சிங்கத்த உசுப்பி விட்டுட்டாங்கல்ல.. எச்ச ராஜா பெரியார் சிலைய உடைப்போம்னு சொன்னது தப்பா இல்லையான்னு தன் கருத்த சொல்லுவாருங்கிறீங்க?
ஜெயலலிதா இல்லாத அதிமுகவின் பிளவுகள் மற்றும் பாஜகவால் பொம்மையாக ஆட்டிப்படைக்கப்படும் ஒரு லும்பன்களின் கூடாரத்தையும் ஒரு பலமுள்ள எதிர்க்கட்சியாக கட்டுக்கோப்பாக இருக்கும் திமுகவையும் நல்ல தலைமை இல்லாத வெற்றிடம் இருக்கிறது என்று இரண்டையும் ஒரே நிலையில் வைத்துப் பார்ப்பது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
கண்ணா..இங்க பாரு..நீயா ஓடிடு..இல்லேன்னா ஓட வைப்போம். உன் முதலாளி பாஜகவையும் சேர்த்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக