மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

ராம ராஜ்யத்தில் "ஆசிபா" க்கள்


மோடி ராஜ்ஜியத்தில் இந்தக் கதியென்றால்
தவமிருந்த காரணத்துக்காய் தலை கொய்த
ராமனின் ராஜ்யத்தில்
தமிழிசை கூட தப்புமா? - இல்லை 
வானதியும்  தான் வாழமுடியுமா?

இந்துக்களாய்  சேர்வோம்
ராமராஜ்யம் அமைப்போம் - என்று
வீரியம் பேசினவன்
தாழ்த்தப்பட்ட இந்துக்களுக்கெதிராக
துப்பாக்கி கொண்டு துரத்தினான்
வீதி வீதியாய் !

சுத்தமில்லை நீ சூத்திரன் என்றான்
சுத்தமில்லாமல் ஒரு சத்தமுமில்லாமல்
கடவுளென்று நீ கருதும் 
கருவறையை பள்ளியறையாய் மாற்றி
கயமைத்தனம் செய்தான் !!

காக்க வேண்டும் கலாச்சாரம் 
காவி தான் ஒரே தேசத்தின் ஆச்சாரம் 
காவல் தெய்வம் என்றான், 
கற்பழிக்கப்பட்டவள் தந்தையை
காவல் நிலையத்தில் கொன்றான் !!!

இத்தனை நடந்தும் வாய் திறக்கவில்லை இதுவரை
பத்து லட்ச ரூபாய் கோட்டு  கட்ட  துரை 
இந்துக்கள் இந்துக்கள் என்று சொல்லி 
இல்லாதவன் பணத்தையெடுத்து 
இருப்பவனிடத்தில் கொடுத்தான் அள்ளி !!!

விழித்துக்கொள் தமிழா இந்துவல்ல நீ 
சூத்திரன் என்று குனியும் நேரம் இதுவல்ல.
வினை செய்,  விளையச் செய்
அழித்து விடும் அதிகாரம் 
எனக்கென்ன என்றிருந்தால்  !!













1 கருத்து:

  1. கண்ணீர் வரவழைக்கும் பதிவு..

    வணக்கம்,

    www.tamilus.com எனும் முகவரியில் புதிய திரட்டி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. பல தமிழ் திரட்டிகளுக்கு பதிவர்களின் சரியான ஒத்துழைப்பு கிடைக்காததால் அவற்றினை மூட வேண்டிய தேவை ஏற்பட்டது. அந்த நிலையினை இத் திரட்டிக்கு கொண்டுவரமாட்டீர்கள் என்ற புதிய நம்பிக்கையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது தமிழ்US

    உங்களது பதிவு பகிரப்பட்டுள்ளது. உங்களின் பயனுள்ள இடுகைகள், ஆக்கங்கள், பதிவுகள் என்பவை பலரைச் சென்றடைய இத் திரட்டியில் பகிர்ந்து உங்களின் ஒத்துழைப்பை நல்குவீர்கள் என நம்புகிறோம்.

    நன்றி..
    தமிழ்US

    பதிலளிநீக்கு

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...