மாயப் பிரம்மாண்டத்தின் மீதிலொரு சிற்றுளியின் சிறு கீறல்.. சிற்றளவேனும் சிதைப்போம் சிறுதுளி தான் பெருவெள்ளம்!!

சமாதானப் புறா - மகா ப்ரபு சிம்பு


மவுனப்போராட்டம் என்று நடிகர்கள் தடுப்பாட்டம் ஆடியதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம்.  அவன் தொழில் எந்த விதத்திலும் பாதிப்படைந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறான். 

ஆனால்,  ஒரு நடிகனின் அடிப்படை அரசியல் அறிவும்,  தமிழ் சமூகம் சந்திக்கும் எந்தப் பிரச்சினையும்  குறித்தான அவனது பார்வையும் அணுகுமுறையும் எந்த அளவுக்கு பெலவீனமானது என்பது மட்டுமல்லாமல் எவ்வளவு ஆபத்தானது போன்றவை அவ்வப்போது சில  நடிகர்கள் மூலம் வெளிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது.

அதிலும் மேலாக,  கிட்டத்தட்ட ஒரு மனநிலை சரியில்லாத மனிதனா இல்லை இவனுக்கு தெரிந்ததே இவ்வளவு தானா என்ற சந்தேகம் ஏற்படும் அளவுக்கு  நேற்றைய  பிரபல விரல்வித்தை நாயகனும் பரம்பரை சொடக்கு போடும் வல்லுநருமாகிய சிம்பு என்ற அறிவாளி பேசுவதை பார்க்க வேண்டிய அவலத்தை அவனிடம் மைக்கை நீட்டிய ஊடகங்கள் ஏற்படுத்திவிட்டது.

பிரபலம் என்பதற்காக இப்படியா ஒரு குறைந்த பட்ச அறிவு கூட இல்லாத நபரிடம் மைக்கை நீட்டுவீர்கள்?

நதி நீர் பங்கீடு குறித்த சர்வ தேச சட்டம் கிலோ என்ன விலைன்னு தெரியுமா? காவிரி பிரச்சினை பற்றிய ஒரு சதவீத அறிவு இல்லாமல் இருக்கும் அவன் பேசலாம்..நீங்கள் மைக்கை நீட்டலாமா?

அன்பா கேட்கணும்னு சொல்லிட்டு ஊடகங்களை "அடி ரா"  என்று துரத்திவிட்டான் பார்த்தீர்களா?

கேனப்பய ஊருக்குள்ள கிறுக்குப் பய நாட்டாமை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏன் இந்த வலைப்பூ (என்னால் முடிந்தது)

உறவாடிக் கெடுப்பவன்

வேதாந்தம் பல பேசி தெளிவாய்க் குழப்பி வேஷம் பல கொண்டு உண்மையின் உரைகல்லென்று ஓயாமல் பொய்யுரைக்கும் எம்மக்களின் முதல்...